Sunday, 12th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல்: நாமக்கல், கோட்டை நகரவை உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில், புதுதில்லி தேசிய பால பவனில் நடைபெறவுள்ள குழந்தைகள் தின விழாவில் கலந்து கொள்ளும் நாமக்கல் மாவட்டம் ஜவகர் சிறுவர் மன்ற மாணவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுதுறையின் கீழ் நாமக்கல் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் நாமக்கல் நகரவை கோட்டை உயர்நிலைப் பள்ளியில் செயல்பட்டுகிறது.
இதில் 16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வாரந்தோறும் ஞாயிற்றுகிழமைகளில் நுண்கலை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
புது தில்லி தேசிய பால பவனில் 17.11.2023 முதல் 19.11.2023 வரை நடைபெற உள்ளது. இக்குழந்தைகள் தின விழாவில் நாமக்கல் கோட்டை நகரவை பள்ளியில் பயிலும் மாணவர்கள் கா.ஹரிஸ் சந்தர், கோ.வல்லபா, வினாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவன் செ.சஞ்சீவ் மற்றும் குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவன் பி.காவியன் ஆகிய 4 மாணவர்கள், பாதுகாவலராக தற்காப்பு கலை ஆசிரியர் சரவணன் ஆகியோர் நாமக்கல் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் மூலம் பங்கேற்க உள்ளனர்.
தொடர்ந்து, குழந்தைகள் தின விழா கலைநிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா பார்வையிட்டார்.
மேலும் மாணவ, மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கி குழந்தைகள் தின விழா வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி, நாமக்கல் ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் மா.தில்லை சிவக்குமார், தலைமை ஆசிரியர் மரகதம், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.